திருவேற்காட்டில் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியின் சாதனைகளை விளக்கி கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்!

Viduthalai
2 Min Read

ஆவடி, ஏப். 10 திருவேற்காட்டில், சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை விளக்கியும், ‘திராவிட மாடல்‘ அரசின் சாதனைகளை விளக்கியும் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.
திருவேற்காடு மகாலட்சுமி நகர் முதன்மைச் சாலை, சாதனா பள்ளி எதிரில், 30.03.2025 அன்று மாலை 6 மணியளவில் ஆவடி மாவட்ட இளைஞரணி சார்பில் தெருமுனைக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ச.சென்ன கிருட்டிணன் தலைமை வகித்து உரையாற்றினார். முன்னதாக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பா.இரா.கலை வேந்தன் அனைவரையும் வரவேற்றுச் சிறப்பித்தார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தொடக்க உரை நிகழ்த்தினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், ஆவடி நகர கழகச் செயலாளர் இ.தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றிச் சிறப்பித்தனர். அதைத் தொடர்ந்து கழகத் துணைப்பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.

பயனாடை அணிவிப்பு
மாவட்டச் செயலாளர் க.இளவரசன், மாவட்டத் துணைத் தலைவர் மு.இரகுபதி, ஆவடி நகரத் தலைவர் கோ.முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் த.ஜானகிராமன், செயலாளர் க.கார்த்திகேயன், மாவட்ட மகளிரணித் தலைவர் பூவை மு.செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.சோபன் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னிலை வகித்து உரையாற்றிய தோழர்கள் மற்றும் முன்னிலை வகித்து சிறப்பித்தவர்கள், சிறப்புரை ஆற்றியவர்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் பயனாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

கலந்து கொண்ட தோழர்கள்
திருமுல்லைவாயில் பகுதித் தலைவர் இரணியன், பகுதிச் செயலாளர் ரவீந்திரன், அம்பத்தூர் பகுதித் தலைவர் பூ.இராமலிங்கம், தென்சென்னை சா.தாமோதரன், மாவட்ட துணைத்தலைவர் வை.கலை யரசன், பூவிருந்தவல்லி நகர கழகத் தலைவர் பெரியார் மாணாக்கன், பருத்திப்பட்டு சுந்தரராஜன், டில்லிராசா, அபினேஷ், மர்பின், பாலாஜி, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் ஜெயராமன், நிஷாந்த், சிறினிவாஸ், மு.பாலகிருட்டிணன், பூ.ஜீவானந்தம், கு.விஷ்ணு, ச.சஞ்சய், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், தமிழரசி, அன்பரசி, இ.கவிதா, ஆவடி நகர கழக துணைத் தலைவர் சி.வச்சிரவேல், த,மணிமாறன், சு.வேல்சாமி, சந்தோஷ், க.இசையின்பன், மு.க.பகலவன், த.பர்தீன், பட்டாபிராம் பகுதித் தலைவர் இரா.வேல்முருகன், கொரட்டூர் பெரியார் அண்ணா கலை ஞர் படிப்பக ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால், கன்னடபாளையம் தமிழரசன், பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துக்கிருட்டிணன், திரு நின்றவூர் பகுதி கழக செயலாளர் கீதா.ராமதுரை, ஜெய் வர்ஷா, சி.அறிவுமதி, சி.அன்புமணி, ஆ.வெ.நடராசன், சி.அமலசுந்தரி, உடுமலை வடிவேல், மு.பவானி, சுகந்தி, பசுபதி, கா.சின்னதுரை, ப.பாக்கியலட்சுமி, சேத்பட் அ.நடராசன், மதுரவாயல் தமிழன் காசி, காட்டாங்குளத்தூர் இ.ப.சீர்த்தி, ஆவடி வ.ம.வேலவன், பெரியார் பிஞ்சு சீ.ப.மகிழன், சுரேஷ், ஆவடி நகரச் செயலாளர் இ.தமிழ்மணி, சு.வெங்கடேசன், அண்ணா நிசார், மா.சிலம்பரசன், சு.சிவக்குமார், சி.ஜெயந்தி, மாங்காடு செ.அன்புச்செல்வி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை செவி மடுத்தனர். திருவேற்காடு நகர கழகத் தோழர் கா.சின்னதுரை நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கலந்து கொண்ட தோழர்களுக்கு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *