ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு

1 Min Read

சட்டமன்றத்தின் அதிகாரங்களை கைப்பற்ற நினைக்கும் ஆளுநர்களுக்கு எதிரான நடவடிக்கை
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து

திருவனந்தபுரம், ஏப்.10 தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார். இது குறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பு குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பதிவில் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்த வழக்கில் அவருக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பதை வரவேற்கிறேன். இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு கூட்டாட்சி தத்துவத்திற்கும், சட்டமன் றத்தின் ஜனநாயக உரிமைகளுக்கும் மதிப்பளிப்பதாக உள்ளது.

ஆளுநர்கள் அமைச்சரவையின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் ஏற்ெகனவே வலியுறுத்தி உள்ளது. தற்போது இந்த தீர்ப்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதிலும் கட்டுப்பாடு விதித்து இருப்பதை அறிய முடிகிறது.

“சட்டமன்றத்தின் அதிகாரங்களை கைப்பற்ற நினைக்கும் ஆளுநர்களுக்கு எதிரான எச்சரிக்கை தான் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

கேரளாவில் நிறைவேற்றப்பட்ட பல சட்ட மசோதாக்கள் தீர்வுகாணப்படா மல் கடந்த 23 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தின் கேரள அரசும் வழக்கு தொடர்ந்து உள்ளது. தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு கேரளாவுக்கும் சாதகமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *