சென்னை, ஏப்.10 கேரளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி,சுத்தமல்லி, முக்கூடல் உள்பட சில இடங் களில் சில மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமைதீர்ப் பாயம் மருத்துவக் கழிவுகளை முழுமையாக அகற்றுமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து அந்த கழிவுகளை அகற்றி விட்டு, அந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் பற்றிய பேச்சு அடங்குவதற்குள் கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக படகில் வந்து தமிழ்நாட்டில் கழிவுகளை திறந்து விடுவதாக ஒரு காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது
இதுகுறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல. கடலில் கழிவுகள் கலப்பது போன்று உருவாக்கப்பட்ட இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவின் (ஏ.அய்.) மூலம் வடிவமைக்கப்பட்டது. இந்த காட்சிப் பதிவு போலவே செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு காட்சிப் பதிவுகளையும் அந்த வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள். எனவே வதந்தியை பரப்பாதீர்” என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கூடுதல் வரிக்கு பதிலடி
அமெரிக்க பொருள் மீது சீனா 84 சதவீத வரி விதிப்பு : முற்றுகிறது மோதல்
வாசிங்டன்,ஏப்.10 உலக நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி அமலுக்கு வந்தது. இவற்றில் சீன பொருட்கள் மீதான 104 சதவீத வரிவிதிப்பும் அடங்கும். அதற்கு பதிலடி யாக, அமெரிக்க பொருட்கள் மீதான வரியை சீனா 84 சதவீதமாக உயர்த்தியது.
இந்தியாவுக்கு வரி
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே விகிதத்தில் பரஸ்பரமாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த 2-ஆம் தேதி எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை சதவீதம் வரி என்று டிரம்ப் அறிவித்தார். இந்த வரிவிதிப்பு 9ஆம் தேதி (நேற்று) அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.
இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தார். சீனப் பொருட்களுக்கு ஏற்ெகனவே விதிக்கப்பட்ட 20 சதவீத வரியுடன் கூடுதலாக 34 சதவீத வரி விதித்தார்.
சீனாவுக்கு வரி
அதற்கு சீனா பதிலடியாக, அமெரிக்கப் பொருட்களுக்கு 34சதவீத வரி விதித்தது. அந்த வரியை 8-ஆம் தேதிக்குள் ரத்து செய்யாவிட்டால், சீனப் பொருட்கள் மீது மேலும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால், சீனா ரத்து செய்யவில்லை. இதனால் சீனப் பொருட்கள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இத்துடன், சீனப் பொருட்கள் மீதான மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது.
அமலுக்கு வந்தது
இந்நிலையில், அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிவிதிப்பு நேற்று (9.4.2025) அமலுக்கு வந்தது. இந்தியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 26 சதவீத வரியும், சீனப் பொருட்கள் மீது விதிக் கப்பட்ட 104 சதவீத வரியும் அவற்றில் அடங்கும்.
மடகாஸ்கர் மீது 47 சதவீ தம், வியட்நாம் மீது 46 சதவீ தம், தைவான் மீது 32 சதவீ தம், தென்கொரியா மீது 25 சதவீதம், ஜப்பான் மீது 24 சதவீதம், அய்ரோப்பிய கூட்டமைப்பு மீது 20 சதவீதம் என அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி அமலுக்கு வந்தது.
சீனா பதிலடி
இதற்கிடையே, அமெரிக்காவுக்கு பதிலடியாக, அமெரிக்கப் பொருட்கள் மீது சீனா மேலும் 50 சதவீத வரி விதித்தது. இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான சீனாவின் வரிவிதிப்பு 84 சதவீதமாக உயர்ந்தது. இது, இன்று (10.4.2025) அமலுக்கு வருகிறது. இந்த வரிவிதிப்பு அமலுக்கு வந்ததால், இந்தியா உள்பட உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன.