முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து – பாராட்டு!

1 Min Read

முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களை நேற்று (8.4.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சந்தித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையொட்டி வாழ்த்து தெரிவித்தார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, ஆ. இராசா, மூத்த வழக்குரைஞர் பி. வில்சன், வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோவன், நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர்கள் ஆர். எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *