சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர் டபிள்யூ பி.ஏ. சவுந்தர பாண்டியனாருக்கு மணி மண்டபம்

1 Min Read

சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஏப்.8 திராவிட இயக்க தலைவர் களில் ஒருவ ரான டபிள்யூ. பி.ஏ.சவுந்தர பாண் டியனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சட்டமன்றத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானியக்கோரிக்கைமீதான விவாதத்தில் 7.4.2025 அன்று ஆலங்குளம் எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் பேசினார்.

அப்போது நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான, தியாகி சவுந்தர பாண்டியனா ருக்கு மணிமண்டபம் கட்ட நட வடிக்கை எடுக்கப்படுமா? என்றார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:- திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவரான சவுந்தர பாண்டியனாருக்கு, மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப் பட்டுள்ளது. உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப் படும் என்றார்.
மனோஜ் பாண்டியன்: எனது கோரிக் கையை உடனடியாக ஏற்று, அறிவிப்பு வெளியிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *