வடமணப்பாக்கம் பொன்.சுந்தர் தாயார் இராதா பாயம்மாள் படத்திறப்பு-நினைவேந்தல்

viduthalai
2 Min Read

சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி பங்கேற்பு

வடமணப்பாக்கம், ஏப். 8- திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் பெரியார் பெருந்தொண்டர் நினைவில் வாழும் நாசி. பொன்னுரங்கம் இணையர் இராதா பாயம்மாள் (வயது 97) படத்திறப்பு நிகழ்ச்சி வடமணப்பாக்கம் பெரியார் திடலில் 30.3.2025 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.

மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.வெங் கட்ராமன் தலைமையில், மாவட்ட கழகத் தலைவர் அ.இளங்கோவன், செய்யாறு நகர தலைவர் தி.காமராசன் முன்னிலை வகித்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். பொன்.கணேசன் வரவேற்புரை ஆற்றினார்.

செய்யாறு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, மறைந்த இராதா பாயம்மாள் படத்தை திறந்து வைத்து குடும்பத்தின் பெருமையை நினைவு கூர்ந்து பேசினார். சிறுநல்லூர் சி.சின்னதுரை, திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினரான அரக்கோணம் பு.எல்லப்பன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி, இராணிப்பேட்டை பொன்.பெருமாள், முனை வர் மு.தமிழ்மொழி, இராணிப் பேட்டை பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் கோ.பாண்டுரங்கன், தீயணைப்புத் துறை உத்திரமேரூர் சு.பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கி.இளையவேல், காஞ்சிபுரம் தமிழ் கூட்ட மைப்பு தலைவர் காஞ்சி அமுதன், ஆற்காடு நகர கழக தலைவர் விநாயகம் ஆகியோர் பேசியதை அடுத்து திமுக தலைமை கழக பேச்சாளர் நாத்திகம் நாகராசன் – மறைந்த அம்மையாரின் உழைப்பினையும், ஏழு பிள் ளைகளை பெற்று வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்ததையும், கணவர் நாசி பொன்னுரங்கம் டில்லி பெரியார் மய்ய திறப்பு விழாவில் காணாமல் போய் திரும்பி வந்த நிகழ்வையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை யையும், மூடப்பழக்க வழக்கங்களை, சடங்கு சம் பிரதாயங்களை கண்டித்தும் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் என்.வி.கோவிந்தன், வடமணப் பாக்கம் கழக செயலாளர் மு.வெங்கடேசன், பி.பரந் தாமன், சீனிவாசன், .பெரு மாள், வ.வெங்கடேசன், யு.ராஜேஸ், பொன்.ரமேஷ், ப.ஜெயலட்சுமி பலராமன், ச.கனகவள்ளி சண்முகம், க.அரங்கநாயகி, சு.ரேணுகா, வெ.சுசிலா, இர.ஜெயசுதா, ச.புவனேஸ்வரி, சு.சுரேந்தர், வெ.பெரியார்செல்வன், இரா.பொன்எழிலன், இரா.எழில்மதி, க.பிரியா, சு.பாரதி, வெப்பாலை வெ.தயாளன், டாஸ்மாக் வெ.இளங்கோவன், வெ.பவித்திராதேவி, அ.வேலு, மோ.சிவகாமி, அ.பாலசுந்தரம், பா.ஆனந்தன், பா.சுந்தா, பா.இராஜேந்திரன், மு.சேகர், தி.திருவேங்கடம், எ.வரதராஜ், சி.கோவிந்தராஜ், ஜெய்சங்கர், ந.கோவிந்தராஜ், பிள்ளையர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செய்யாறு மாவட்ட திராவிடர் கழக செயலா ளர் பொன்.சுந்தர், இராணிப் பேட்டை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் பொன்.வெங்கடேசன் நிகழ்ச் சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *