அதிமுக மேனாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு ஆளுநர் இதுவரை இசைவு தராதது ஏன்?

2 Min Read

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம்

அரசியல்

சென்னை, ஜூலை 6 அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளுக்கான இசைவு ஆணையையும், சட்ட மசோதாக் களுக்கு ஒப்புதலையும் இனியும் தாமதிக்காமல் வழங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

 இதுகுறித்து  அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது: ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு ஆணைக்காக அனுப்பப் பட்ட கோப்புகள் நீண்ட காலமாக உங்களிடம் நிலுவையில் உள்ளன. ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப் பட்ட மசோதாக்களும் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுப்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் களான டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா, மாவா வினியோகிப்பாளர் களிடம் இருந்து சட்ட விரோத மாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒன்றிய புலனாய்வு அமைப்பு (சி.பி.அய்.) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, அவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.அய். கோரியது.

மாநில அமைச்சரவையும், அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.அய். யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.9.2022 அன்று அனுப்பி வைத்தது. ஆனால்   இது வரையில் அந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறா மல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுகிறது. இத னால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடிய வில்லை.

மேலும், மேனாள் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் மேனாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசா ரணையை தொடங்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் இசைவு ஆணை கோரியது. இந்த கோரிக்கைகளுக்கு மாநில அமைச் சரவை அனுமதி அளித்து, அதற் கான கடிதங்களை முறையே 12.9.2022 மற்றும் 15.5.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத் திற்கு அனுப்பி வைத்தது.

இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன. முந்தைய அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையை தொடங்க தேவையான இசைவு ஆணையை இதுவரை நீங்கள் வழங்கவில்லை.

ஊழல் வழக்குகளில் இசைவு ஆணை நிலுவையில் இருப்பது தவிர, மாநில சட்டப் பேரவை யில் நிறைவேற்றப்பட்ட 13 மசோ தாக்கள், உங்களின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளன. இவற்றில் 2 மசோதாக்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. எனவே, மேற்குறிப்பிட்டுள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் மசோதாக்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி, இனியும் தாம திக்காமல் ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்க இசைவு ஆணையையும், மசோதாக் களுக்கு ஒப்புதலையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *