கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ். குறித்த சர்ச்சைக் கேள்விகள் பேராசிரியருக்குத் தடை!

viduthalai
3 Min Read

மீரட், ஏப்.7- உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை (பொலிட்டிகல் சயின்ஸ்) தலைவராக இருப்பவர் சீமா பன்வார்.

இவர், கல்லூரியில் நடைபெற்ற தேர்வுக்கு வினாத்தாள் தயார் செய்திருந்தார். அந்த வினாத்தாளில் இரு விடைகள் கொண்ட பலதேர்வு வினாக்களில் (எம்சிக்யூ) ஆர்எஸ்எஸ் பற்றிய இரு சர்ச்சைக் கேள்விகள் இடம்பெற்றது.

ஆர்.எஸ்.எஸ். எவ்வாறு வளர்ச்சியடைந்தது? என்கிற கேள்வி எண் 87இல், அதற்கு விடைகளாக மத ரீதியாக அல்லது ஜாதி வழி அரசியலால் என்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கேள்வி அமைக்கப்பட்டிருந்தது.

அதேபோல, கேள்வி எண் 97இல் ஆர்எஸ்எஸ் அமைப்பை நக்சல்கள், ஜம்மு – காஷ்மீர் விடுதலை அமைப்புகளுடன் இணைத்து கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இதனால் கல்லூரியின் ஹிந்து மாணவர் அமைப்பான ஏபிவிபி பேராசிரியருக்கு எதிராகக் கடந்த 4.4.2025 அன்று போராட்டம் நடத்தினர்.

பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கீடு
யானைப் பசிக்கு சோளப் பொரியா?
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

தமிழ்நாடு

சென்னை, ஏப். 7- ஒன்றிய அரசின் பேரிடர் நிதி, சோளப் பொரி கொடுத்து யானைப் பசி தீர்க்கும் செயலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

பேரிடர் நிவாரண நிதி

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயற்கை பேரிடர் தாக்குதலால் பல்லாயிரம் கோடி பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. பெஞ்ஜல் புயல், பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடர் வரையான இழப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மறுசீரமைப்பு செய்யவும் 37 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் கூடுதலான பேரிடர் நிவாரண நிதி மற்றும் பேரிடர் துயர் தணிப்பு நிதி தேவை என தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசிடம் முறையிட்டுள்ளது.

யானைப் பசிக்கு சோளப் பொரி

பேரிடர் காலங்களில் ஒன்றிய அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு செல்கின்றனர். அப்போதெல்லாம் ஒன்றிய அரசு பெரும் உதவி செய்யும் என்று உறுதி அளித்துச் செல்கின்றனர். தொடர்ந்து ஒன்றிய அரசின் பல்துறை உயர் அலுவலர்கள் கொண்ட குழுக்களை அனுப்பி, கள ஆய்வும், அதிகாரிகள் மற்றும் அரசு மட்ட விசாரணைகளும் மேற்கொண்டு, ஒன்றிய அரசுக்கு அறிக்கைகளை பெற்று வருகின்றது.

ஆனால், குடிப்பதற்கு தண்ணீர் கேட்டால், குளிப்பாட்ட தண்ணீர் தருவது போல் மிக நீண்ட கால தாமதத்திற்கு பிறகு சொற்ப தொகையை ஒதுக்கீடு செய்து, ஒப்புதல் வழங்கும் நிர்வாக நடவடிக்கையை கூட, பெரிய அளவில் விளம்பரம் செய்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம், தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியாக ரூ 522.34 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதியில் 1.5 சதவீதம் கூட இல்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

ஒன்றிய அரசின் இந்த நிதி ஒதுக்கீடு “சோளப்பொரி போட்டு, யானைப்பசியை போக்கும்” முயற்சியாகும். தமிழ்நாட்டையும், தமிழ்நாடு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசுக்கு கடுமையான பாடம் புகட்ட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் நிவாரண நிதியை முழு அளவில் வழங்கி உதவ வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.’

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *