காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக கலந்துரையாடலில் தீர்மானம்
காவேரிப்பட்டணம், ஏப். 7- கழக கலந்துரையாடல் கூட்டம் 30.03.2025 அன்று மாலை 4.00 மணியளவில் பையூர் சுயமரியாதைச் சுடரொளி ப.பெரியசாமி பண்ணை தோட்டத்தில் நடைபெற்று கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் தலைமை வகித்துப்பேசினார்.ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டத்திற்கு மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனி வாசன், பொதுக்குழு உறுப்பினர் இல. ஆறுமுகம் ஆகியோர் முன் னிலை வகித்துப்பேசினர்.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் சிதம்பரம் கழகப் பொதுக்குழு மற்றும் மாவட்ட கழக கலந்து ரையாடல் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை விளக்கியும் ஒன்றிய கழகப் பொறுப்பாளர்களும் தோழர்களும் செயலாற்ற வேண்டிய செயல்பாடுகளை விளக்கியும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்டுகளையும் எடுத்துக் கூறி கருத்துரையாற்றினர்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந்திரபாபு, ஆவடி மாவட்ட கழக நிர்வாகி இரவிந்திரன், பையூர் கிளை செய லாளர் சரவணன், புலிக்கொடி, பெரியார் பிஞ்சு செ.வீரபாண்டி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு பேசினர். நிறைவாக பையூர் கிளை செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் மற்றும் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் ஒருமனதாக ஏற்று செயலாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.
சிதம்பரம் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் புதிய கிளைக் கழக அமைப்புகளை உருவக்க வேண்டும் என்று தெரிவித்த அறிவிப்பினை ஏற்று காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் பத்து புதிய திராவிடர் கழக கிளைக் கழக அமைப்புகளை உருவாக்குவது எனவும், தெருமுனை பிரச்சார கூட்டங்களையும் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டத்தை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மாதாந்திர ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் ஏப்ரல் மாதத்திலிருந்து மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடத்துவது எனவும், கழக தோழர்கள் இல்லம் என்பதற்கு அடையாளமாக இனமான கழகக் கொடியை ஒவ்வொரு கழக தோழர்கள் இல்லத்திலும் ஏற்றுவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.