புதுக்கோட்டை, ஏப். 6- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஒன்றிய கழகத்தின் சார்பில் மாபெரும் வழக்காடு மன்றம் 7.4.2025 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் திராவிடல் மாடல் ஆட்சிக்கு வேண்டுமென்றே பாஜக சார்பில் பல முட்டுக்கட்டைகளைப் போட்டு வருகிறது. இவ்வாறு மக்களின் நலன், தமிழ்நாட்டின் நலனைப் பாதுகாத்து வரும் திராவிடல் மாடல் ஆட்சிக்குத் முட்டுக்கட்டை போடுவது குற்றமே என்ற என்ற தலைப்பில் இந்த வழக்காடு மன்றம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுக்கு விராலிமலை ஒன்றியத் தலைவர் ஓவியர்.சி.குழந்தைவேல் தலைமை வகிக்கிறார். மாவட்டத் துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி அனைவரையும் வரவேற்கிறார். திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் மு.பி.ம.சத்தியசீலன், மேற்கு ஒன்றியச் செயலாளர் அ.இளங்குமரன், மத்திய ஒன்றியச் செயலாளர் கே.பி.அய்யப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மா.பழனியப்பன், ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றுகிறார்.
வழக்காடு மன்றத்தின் நடுவராக மாநில கிராமப்புற பரப்புரைச் செயலாளர் அதிரடி அன்பழகன் இருந்து நடத்துகிறார். கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் வழக்கு தொடுக்கிறார். கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் வழக்கை மறுக்கிறார்.
மாவட்டக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.சரவணன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்கிறார்கள். புதுக்கோட்டை நகரத் தலைவர் ரெ.மு.தருமராசு நன்றி கூறுகிறார். வழக்காடு மன்றத்திற்கான ஏற்பாடுகளை விராலிமலை ஒன்றியத் கழகம் செய்து வருகிறது.