புதுக்கோட்டை, ஏப்.6- புதுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்டத் தலவைர் மு.அறிவொளி தலைமை வகித்தார். மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் தொடக்கவுரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.குணசேகரன் கருத்துரையாற்றினார்.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாநில ப.க. தோழர் அ.சரவணன், பொதுக்குழு உறுப்பினர் மூ.சேகர், நகரத் தலைவர்
சு.கண்ணன், பெரியார் பெருந்தொண்டர் செ.இராசேந்திரன், பி.சேகர், திருமயம் ஒன்றியச் செயலாளர் க.மாரியப்பன், ஒன்றியத் தலைவர் தமிழரசன், குழிபிறை சிவா, தொழிலாளர் அணி ஆ.பத்மநாபன், மாவட்ட ப.க.செயலாளர் மலர்மன்னன், மாவட்ட ப.க. அமைப்பாளர் தி.குணசேகரன், ம.மு.கண்ணன், அரிமழம் துரை.இந்திரஜித், பெரியார் பிஞ்சு கதிரவன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நகரில் நடைபெற்ற கழக பொதுக்குழுக் கூட்டத்தின் தீர்மானங்களை ஏற்பதுடன், முழுமையாக ஏற்றுச் செயல்படுவது, பெரியார் உலகமயம்- உலகம் பெரியார் மயம் என்ற பெரும் பணியில் ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கழகத் தலைவரின் சுற்றுப் பயணம் வெற்றிகரமாக நடைபெற இக்கூட்டம் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் திருச்சி சிறுகனூரில் ரூபாய் 100கோடி செலவில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு தலா ஒருலட்சம் வழங்கிச் சிறப்பித்த மாவட்டத் தலைவர் பேராசிரியர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன் ஆகியோருக்கு வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
திராவிடல் மாடல் ஆட்சிக்கு எதிரான தடைக்கல்லை விளக்கி 7.4.2025 அன்று விராலிமலையில் வழக்காடு மன்றம், 13.4.2025 அன்று கோமாபுரத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது, மாவட்டத்தின் அனைத்து நகரங்களிலும் ஒன்றியங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, அறந்தாங்கி கழக மாவட்டக் காப்பாளர் கீரமங்கலம் தங்கராசு 16.3.2025 அன்று மறைவுற்றார். 17.3.2025 அன்று மாவட்டக் கழகம் சார்பாக இறுதி மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழக்கமிடப்பட்டது. இந்தக் கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பெரியார் பிஞ்சு கதிரவன் நன்றி கூறினார்.