சென்னை, ஏப்.6- சட்டப் பேரவையில் 2.4.2025 அன்று கேள்வி நேரத்தின் போது, திருத்தணி திமுக உறுப்பினா் எஸ்.சந்திரன் எழுப்பிய வினாவிற்கு அமைச்சா்
பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
திமுக அரசு பொறுப்பேற்ற வுடன், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தடுக்கும் வகையில், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, சென்னை கொளத்தூா், ஒட்டன்சத்திரம், திருச்செங்கோடு, விளாத்திகுளம் ஆகிய இடங்களில் புதிதாக கல்லூரிகள் தொடங்கப் பட்டன.
வழக்குகளால் 6 கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் இப்போது ஒருசில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, ஆறு கல்லூரிகளையும் நிகழ் ஆண்டுக்குள் தொடங்குவதற்கான நல்ல சூழலை உருவாக்கிய பிறகு நிச்சயம் திருத்தணியிலும் கல்லூரி உருவாக்கப்படும்.
இதேபோன்ற கோரிக்கைகளை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, பாஜக குழுத் தலைவா் நயினார் நாகேந்திரன் ஆகியோரும் முன்வைத்துள்ளனா். அவைகளும் பரிசீலிக்கப்படும் என்றார்.