பெத்தநாயக்கன் பாளையத்தில் கழக பிரச்சார பொதுக்கூட்டம்

2 Min Read

பெத்தநாயக்கன்பாளையம், ஏப்.6- ஆத்தூர் திராவிடர் கழ கத்தின் சார்பில் பெத்தநாயக்கன் பாளையத்தில் அன்னை மணியம்மையார் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முதலமைச்சர் முகாஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சிறப்பு செய்த மாவட்ட தலைவர் அ.சுரேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் நீ.சேகர், த. வானவில் மாவட்ட காப்பாளர், இரா. விடுதலை சந்திரன் மாவட்ட காப்பாளர், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜீ, மேட்டூர் மாவட்ட தலைவர் கா.நா.பாலு, சேலம் மாவட்ட செயலாளர் சி.பூபதி, ஆத்தூர் நகர தலைவர் வெ.அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊமை ஜெயராமன்

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தொடக்கவு ரை ஆற்றினார். இரா.பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பெ.வெங்கடேஷ் நகர செயலாளர் திமுக, பழனியம்மாள் ராஜமணி நகர்மன்ற தலைவர் திமுக, ஆர்.ஓசுமணி மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் கட்சி, வ. கோபால் ராஜ் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் மதிமுக, குட்டி வெங்கடேஷ் ஆதிதமிழர் பேரவை மாநில கொ.ப.து.செயலாளர், ஆத்தூர் வெங்கடேஷ் திமுக தலைமை கழக பேச்சாளர், ஆத்தூர் ஆனந்த் அய்டிவிங் பிரிவு திமுக, கலையரசி சக்திவேல் 8 ஆவது வார்டு உறுப்பினர், ஆ.பால முருகானந்தம் ஆடிட்டர் திமுக கலைஞர் அய்டிவிங் பிரிவு ஆகியோர் வருகை தந்து தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

கோ.அறிவழகன் மாநில இணை அமைப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் எ.வி. தங்கவேல், பெரியார் பெருந்தொண்டர் தும்பல் அங்கமுத்து, சேலம் சிறீதர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த தோழர்கள், முருகானந்தம், மாயக்கண்ணன், பழனிவேல், புத்திரகவுண்டம்பாளையம் ரமேஷ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துகளை கேட்டு தெளிவுபெற்று கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் பேசி முடித்தவுடன் அனைவரும் அருகில் வந்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டு ஒளிப்படம் எடுத்து கொண்டனர். நிறைவாக அனைவருக்கும் நன்றி கூறினார் மாவட்ட தலைவர் அ. சுரேஷ், வருகை தந்த அனைவருக்கும் இரவு உணவை பழனியம்மாள் ராஜாமணி ஏற்பாடு செய்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *