செட்டிநாட்டு அரசர் குடும்பம் மற்றும் ராஜா சர் முத்தையா, டாக்டர் எம்.ஏ.எம்.இராமசாமி ஆகியோரின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தவரும், இந்தியன் வங்கியின் மேனாள் மேலாளருமான ஆத்தங்குடி ஏஆர்.இராமசாமி (வயது 91) சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள தமது இல்லத்தில் நேற்று (4.4.2025) அதிகாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
நினைவாற்றல், பல்வேறு பெருமக்களின் நன்மதிப்பு, பரந்து விரிந்த மேலாண்மை நிர்வாகம், கூட்டுக் குடும்ப வாழ்வின் முன்னோடி என முன்மாதிரி மனிதராக வாழ்ந்தவர். இவருக்கு மனைவி ஆர்எம்.மீனாட்சி, மகன்கள் டாக்டர் ஆர்எம்.ஆறுமுகம், ஆர்எம்.இராஜேந்திரன், ஆர்எம்.வெங்கடாசலம், மகள் வசந்தா நடராஜன் உள்ளனர்.
நேற்று (4.4.2025) திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மறைவுற்ற ஏஆர்.இராமசாமி உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.
இன்று (5.4.2025) காலை அவரது இறுதி நிகழ்வு நடைபெற்றது.
ஆத்தங்குடி ஏஆர்.இராமசாமி மறைவு

Leave a Comment