தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களுக்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பயனாடை அணிவித்தார். தி.மு.க. தென் மேற்கு மாவட்ட செயலாளரும், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு சிறப்புரையாற்றினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் மதிவதினி, கழகப் பேச்சாளர் தே. நர்மதா, மயிலை கிழக்கு பகுதி செயலாளர் எஸ். முரளி, சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரேவதி, இந்திய கம்யூனிஸ்ட் எஸ்.கே.சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மய்யக் குழு உறுப்பினர் பி. சாரநாத், தி.மு.க. வட்ட செயலாளர் அ. தவநேசன், மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி, மாநில ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர். சேதுராமன் ஆகியோர் உள்ளனர். (மயிலை, 3.4.2025)
ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் மயிலாப்பூரில் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டம்
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books