அழகப்பா பல்கலைக் கழகத்தின் (காரைக்குடி) பதினைந்தாம் பட்டமளிப்பு விழா 4.4.2003 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:15 மணிக்குத் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் விழாவிற்குத் தலைமை தாங் கினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி அவர்கள் வரவேற் புரையாற்றினார். டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதற்குமுன் ஆசிரியரது சிறப்பு இயல்புகளை, சாதனைகளை, கல்வித் தகுதிகளை, அரை நூற்றாண்டைக் கடந்த தொண்டுப் பணிகளை பட்டியலிட்டுக் காட்டினார் துணைவேந்தர் – மகளிர் கல்வி, மகளிர் முன்னேற்றம், சமூகநீதி, சமூக சீர்திருத்தம் முதலிய துறைகளில் ஆசிரியர் அவர்களின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அதில் குறிப்பிட்டார். காலை 10:40 மணிக்கு மதிப்புறு டாக்டர் (டி.லிட்) பட்டத் தினை தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக் கழகவேந்தர் மேதகு ராம்மோகனராவ் அவர்கள் நீண்ட கரவொலிக்கிடையே ஆசிரியருக்கு வழங்கினார்.