தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அழகப்பா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிய நாள் (4.4.2003)

1 Min Read

அழகப்பா பல்கலைக் கழகத்தின் (காரைக்குடி) பதினைந்தாம் பட்டமளிப்பு விழா 4.4.2003 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:15 மணிக்குத் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் விழாவிற்குத் தலைமை தாங் கினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி அவர்கள் வரவேற் புரையாற்றினார். டாக்டர் பட்டம் அளிக்கப்படுவதற்குமுன் ஆசிரியரது சிறப்பு இயல்புகளை, சாதனைகளை, கல்வித் தகுதிகளை, அரை நூற்றாண்டைக் கடந்த தொண்டுப் பணிகளை பட்டியலிட்டுக் காட்டினார் துணைவேந்தர் – மகளிர் கல்வி, மகளிர் முன்னேற்றம், சமூகநீதி, சமூக சீர்திருத்தம் முதலிய துறைகளில் ஆசிரியர் அவர்களின் பணிகளைப் பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்படுவதாக அதில் குறிப்பிட்டார். காலை 10:40 மணிக்கு மதிப்புறு டாக்டர் (டி.லிட்) பட்டத் தினை தமிழ்நாடு ஆளுநர் பல்கலைக் கழகவேந்தர் மேதகு ராம்மோகனராவ் அவர்கள் நீண்ட கரவொலிக்கிடையே ஆசிரியருக்கு வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *