கும்பகோணம் அருகே கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுப்பு

2 Min Read

அரசியல், தமிழ்நாடு

தஞ்சாவூர்,ஜூலை6- கும்ப கோணம் அருகேயுள்ள கீழப் பழையாறையில் புத்தர் சிலையின் தலைப் பகுதி கண்டெடுக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக் கழக மேனாள் உதவிப் பதிவாள ரும், வரலாற்று ஆய்வாளருமான முனைவர் பா.ஜம்புலிங்கம் கூறிய தாவது:

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் புலவர் ச.செல்வசேகருடன் மேற்கொண்ட களப்பணியின் போது, பட்டீஸ்வரம் அருகே கீழப் பழையாறையில் உள்ள ஒரு தென் னந்தோப்பில் 50 செ.மீ. உயரமுள்ள ஒரு புத்தர் சிலையின் தலைப் பகுதியைக் காண முடிந்தது.

இது கி.பி.10-11ஆம் நூற்றாண் டைச் சார்ந்ததாகும். சோழ நாட் டில் காணப்படுகின்ற புத்தர் சிலை களின் கூறுகளான சற்றே மூடிய கண்கள், நீண்ட காதுகள், புன் னகை சிந்தும் இதழ்கள், தலையில் வரிசையாக சுருள்முடி, அதற்கு மேல் ஞானத்தை உணர்த்தும் தீச் சுடர், நெற்றியில் திலகக்குறி ஆகிய வற்றுடன் இந்தச் சிலை உள்ளது. மூக்கும், காதுகளின் கீழ்ப்பகுதியும் சிதைந்துள்ளன.

இந்தச் சிலை உடற்பகுதியுடன், பழையாறையில் முன்பிருந்த புத் தர் கோயிலிலோ, விகாரத்திலோ வழிபாட்டில் இருந்திருக்கலாம். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட் டம், திருச்சி மாவட்டம், புதுக் கோட்டை மாவட்டங்களை உள் ளடக்கிய சோழ நாட்டில் 60-க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள் உள் ளன.

அவற்றில், தஞ்சாவூர் மாவட் டத்தில் அருந்தவபுரம், கோபி நாதப்பெருமாள்கோயில், சோழன் மாளிகை, திருவலஞ்சுழி, பட்டீஸ் வரம், பெரண்டாக்கோட்டை, மணலூர், மதகரம், மாத்தூர், மானம்பாடி, முழையூர், விக்ரமம், வையச்சேரி ஆகிய இடங்களில் புத்தர் சிலைகள் உள்ளன. 

அருந்தவபுரம், கோபி நாதப் பெருமாள் கோவில், மணலூர் ஆகிய இடங் களில் தலையின்றியும், பெரண்டாக் கோட்டை, முழை யூர், வையச்சேரி ஆகிய இடங்களில் தலைப்பகுதி மட்டும் உள்ளன.

பட்டீஸ்வரம், பெரண்டாக் கோட்டை, மானம்பாடி, விக்ரமம் ஆகிய இடங்களில் உள்ள சிலை கள் வழிபாட்டில் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் பழை யாறைப் பகுதியில் அதிகமான புத்தர் சிலைகள் கண்டெடுக்கப்பட் டுள்ளன. 

இவை இப்பகுதியில் பவுத்தம் செழித்து இருந்ததை உணர்த்தும் சான்றுகளாக உள் ளன. இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *