சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சாலைகளில் பறக்கும் கட்சிக் கொடிகள் பற்றி கீழ்க்கண்ட உத்தரவை 2025 ஜனவரி 25 அன்று பிறப்பித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி மற்றும் மதம் சார்ந்த கொடிக் கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளதால், கழகக் கொடி கம்பங்களை அகற்றுமாறு கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். – கலி. பூங்குன்றன் சென்னை துணைத் தலைவர் 4.4.2025 திராவிடர் கழகம் குறிப்பு: கல்வெட்டுகள் இருந்தால் அதை ஒளிப்படம் எடுத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.