சென்னை, ஏப்.4 இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும் என்று சட்டப் பேரவை யில் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அறிவித்தார்.
சட்டப் பேரவையில் நேற்று (3.4.2025) வருவாய்த்துறை அமைச்சர் பேசிதாவது:
முதியோர் ஓய்வூதியம் பெற்றால் மகளிர் உரிமைத்தொகை பெற முடியாது. அந்த வகையில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களையும் முதியோர் ஓய்வூதியம் பெறுவோரின் விவரங் களையும் ஆய்வுசெய்யும் பணி நடந்ததால்தான் ஜூலை மாதம் வழங் கப்படவில்லை. தற் போது தகுதியான பய னாளிகளுக்கு தொடர்ந்து முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக மேலும் 50 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தொகை வழங்க முதலமைச்சர் ஆணை யிட்டுள்ளார். திமுக ஆட்சிப்பேற்று கடந்த 4 ஆண்டுகளில் 3 கோடியே 78 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
வருவாய்த்துறையில் சான்றிதழ் கோரி விண் ணப்பிக்கும் பொது மக்களுக்கு 15 நாட்களில் உரிய சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தை விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 22 லட்சத்து 59 ஆயிரம் கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் இந்த ஆண்டு 24 மாவட்டங் களில் 1270 முகாம்கள் நடத்த பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.