பெண்கள் பெயரில் சொத்துப் பதிவில் கட்டணச் சலுகை : வழிகாட்டுதல்கள் விவரம்

2 Min Read

சென்னை,ஏப்.4 ரூ.10 லட்சம் வரை சொத்துக்கள் பெண்களின் பெயரில் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது ஓரு சதவீத பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று பத்திர பதிவுத்துறை அறிவித்துள்ளது. இந்த சலுகை, எந்தெந்த இனங்களுக்கு பொருந்தும், பொருந்தாது என்று பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது.

பத்திரப்பதிவுத்துறை அறிக்கை

ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் மற்றும் விவசாய நிலங்கள் உட்பட அனைத்து அசையா சொத்துக்களுக்கும், பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது, 1.4.2025 முதல் பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த மார்ச்-14ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து, ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிவு செய்யும் போது ஏப். 1 முதல் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். அதன்படி, இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

யாருக்கு சலுகை பொருந்தும்

ஒரு சொத்தினை குடும்ப நபர்களுடன் குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து, அதில் பெண்கள் பெயரில் மட்டுமே சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தும்.
ஒரு சொத்தினை, குடும்ப நபர்கள் சேர்ந்து, அதில் பெண்கள் பெயரில் மட்டுமே வாங்கினால் இந்த சலுகை பொருந்தும்.

யாருக்கு சலுகை பொருந்தாது

ஒரு சொத்தினை, குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி கூட்டாக சேர்ந்து வாங்கினால் இந்த சலுகை பொருந்தாது. ஒரு சொத்தினை குடும்ப நபர்களில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது. ஒரு சொத்தினை குடும்பம் அல்லாத நபர்கள் சேர்ந்து அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது. ஒரு சொத்தினை குடும்ப நபர்களுடன் குடும்ப நபர்கள் அல்லாதவர்கள் சேர்ந்து, அதில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து வாங்கினாலும் இந்த சலுகை பொருந்தாது.

வழிகாட்டி மதிப்பு

சொத்தின் சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு ரூ.10 லட்சம் வரை மட்டுமே இருக்க வேண்டும். சலுகையை பெறுவதற்காக,ஒரு சொத்தை வேண்டுமென்றே பல பகுதிகளாக பிரிக்கக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு 2400 சதுரடி காலி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பின்படி 12 லட்சம் ரூபாய் வருகிறது. இதை, இரண்டு 1200 சதுரடி அல்லது நான்கு 600 சதுரடியாக பிரித்து ஆவணங்கள் வேறு வேறு பெண்கள் பெயரில் பதிவுக்கு தாக்கல் செய்தாலும் இந்த சலுகை பொருந்தும்.
ஒரு 2400 சதுரடி காலி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பு 12 லட்சம் வருகிறது என்றால், சலுகை பெறுவதற்காக இரண்டு 1200 சதுர அடி அல்லது நான்கு 600 சதுரடி மனைகளாக பிரித்து ஆவணங்கள் ஒரே பெண் பெயரில் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்டால், சலுகை பொருந்தாது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *