கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

4.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைத்திட தமிழ்நாடு அரசு முடிவு, முதலமைச்சர் அறிவிப்பு.
* வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன் றத்தில் வழக்கு: முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர்ர் மு.க.ஸ்டாலின் உறுதி
* அரசமைப்பு சட்டத்தின் மீது விழுந்த அடி, வக்பு திருத்த சட்டம் குறித்து சோனியா காட்டம்.
* நாடாளுமன்ற ஒப்புதலின்றி கச்சத்தீவை இலங் கைக்கு விட்டு கொடுத்தது அரசியலமைப்புக்கு எதிரானது: மக்களவையில் டி.ஆர்.பாலு குற்றச் சாட்டு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை, நாடாளுமன்ற குழு குற்றச்சாட்டு.
* மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி, நள்ளிர வில் மக்களவையில் ஒப்புதல் பெற்றது மோடி அரசு.
* தெலுங்கானா அமைச்சரவையில் தற்போது இரண்டு பிற்படுத்தப்பட்டோர் மட்டுமே உள்ளனர். மேலும் கூடுதலாக இரண்டு பேர் நியமிக்க ராகுல், சோனியாவிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்.
* எதிர்க்கட்சிகளின் கடும் கண்டனத்தையும் மீறி மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதா நிறைவேற்றம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வக்பு திருத்த மசோதாவுக்கு நிதிஷ் குமார் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் ஆதரவு தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் மூத்த தலைவர் அன்சாரி விலகல்.
* 4000 சதுர கிமீ நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது: கூட்டாளி அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளது, ராகுல் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அதிமுகவுடன் கூட்டணி உறுதி, அண்ணாமலை யிடம் பாஜக டில்லி தலைமை அறிவுறுத்தல்.
தி இந்து:
* ‘கேரளா, தமிழ்நாடு, வங்காளம் ஆகிய மாநிலங் கள் சமக்ர சிக்ஷாவுக்கு நிதி பெறவில்லை’, நாடாளுமன்ற குழு அறிக்கை.
* மூன்று மாநிலங்களுக்கும் முறையே ரூ.328.9 கோடி, ரூ.2,151.6 கோடி மற்றும் ரூ.1,745.8 கோடி ஒதுக்கப்பட்டது,
* ஆனால் நிதி விடுவிக்கப்படவில்லை என்று கல்வித்துறை இணை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸின் கேள்விக்கு பதில்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *