‘எம்புரான்’ திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கமாம்

viduthalai
2 Min Read

திருவனந்தபுரம், ஏப்.3 மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் நடித்திருக்கும் படம் எல்2: எம்புரான். இந்தப் படம் மார்ச் 27-ஆம் தேதி வெளியானது.இந்தப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2002-ஆம் ஆண்டு அங்கு நடந்த கலவரத்தை குறித்து பேசுவதாக எதிர்ப்பு எழுந்தது.

இதற்கிடையே, இந்தப் படத்தில் இந்திய ராணுவம் குறித்தும் குஜராத் கலவரம் குறித்தும் வசனங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க. சார்பில் நிர்வாகி வி.வி.விஜேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, விளம்பர நோக்கத்துடன் கொடுக்கப்படும் புகார் என கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன், எம்புரான் படத்திற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்தார்.

இந்நிலையில், எம்புரான் படத்துக்கு எதிராக வழக்கு தொடுத்த திருச்சூர் மாவட்ட நிர்வாகி விஜேஷ் ஒழுங்கு நடவடிக்கையாக பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
பிஜேபியில் பெருங்குழப்பம்

ராமநாதபுரம், ஏப்.3 பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகளில் “அண்ணா மலை தான் வேண்டும், அதிமுக கூட்டணி வேண் டாம்” என்று ஒட்டப்பட்ட சுவரொட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட வேண்டுமெனில், தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமாலையை நீட்டிக்க கூடாது என்று வலியுறுத் தப்பட்டுள்ளதாகவும், இதனால் அண்ணாமலையை வேறு பதவிக்கு மாற்ற பாஜக தலைமை திட்ட மிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியுள்ளன. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக ராமநாதபுரம் மாவட்ட செயலாளராக உள்ள சரவணன் “வேண்டும்.. வேண்டும்… அண்ணாமலை வேண் டும், வேண் டாம்.. வேண்டாம்.. அதி முக கூட்டணி வேண்டாம்..” என்ற சுவரொட் டிகளை முதுகுளத்தூர், பரமக்குடி பகுதிகளில் ஒட்டியுள்ளார். இந்த சுவரொட்டி பாஜக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பாஜக மாவட்டச் செயலா ளர் சரவணனிடம் கேட்ட போது, “கடுமை யாக உழைத்து, பாஜகவை வளர்த்தார் அண்ணாமலை. அவரது அரசியல் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. திமுகவை கடுமையாக எதிர்க்க அவர் தொடர்ந்து தமிழ்நாடு பாஜக தலைவராக நீடிக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக தொடர்ந்து வளர வேண்டுமெனில் தலைவராக அண்ணாமலை நீடிக்க வேண்டும். இதை கட்சித் தலைமை உணர்ந்து செயல்பட வேண்டும். இதை வெளிப்படுத்தும் வகையில்தான் சுவரொட்டிகளை ஒட்டியுள் ளேன்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *