விமானத்தின் ஜன்னலில் துளை இருப்பது ஏன்?

1 Min Read

விமானத்தின் ஜன்னலில் ஒரு சிறிய துளை இருக்கும். இதற்கு பின்னால் இவ்வளவு பாதுகாப்பு காரணங்கள் இருக்கின்றன என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஒரு விமானம் புறப்பட்டு உயரத்தில் பறக்கும் போது காற்றின் அழுத்தம் குறைகிறது. கேபினுக்கு உள்ளேயும் விமானத்திற்கு வெளியேயும் உள்ள காற்றின் அழுத்தத்தில் உள்ள வேறுபாடு விமானத்தின் மீது பெரிய அளவிலான அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

விமானம் பறக்கும்போது கேபினுக்குள் இருக்கும் அழுத்தம், வெளியேயுள்ள அழுத்தத்தை விட அதிகமாக இருக்கும். இந்த அழுத்த வேறுபாட்டை சமன் செய்ய, ஜன்னலில் ஒரு சிறிய துளை வைக்கப்படுகிறது.

இந்த துளை, “bleed hole” அல்லது “pressure relief hole” என்று அழைக்கப்படுகிறது. இந்த துளை பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

திடீரென அழுத்தம் குறைந்தால், ஜன்னல் வெடித்து சிதறக்கூடும். இந்த துளை மூலம் அழுத்தம் மெதுவாக வெளியேறி, ஜன்னல் வெடிக்காமல் பாதுகாக்கப்படுகிறது.
மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், விமான ஜன்னல்களில் மூடுபனி படிவதை இந்த துளை தடுக்கிறது. கேபினின் உள்ளேயும் விமானத்திற்கு வெளியேயும் உள்ள வெப்பநிலை வேறுபட்டதாக காணப்படுகிறது. இந்த இடைவெளியில் இருந்து ஈரப்பதத்தை வெளியிடாவிட்டால் கீழே உள்ள பூமியின் அழகிய காட்சிகள் அந்த ஜன்னலில் நமக்கு மறைக்கப்படும். இந்த துளை மூலம் இது தடுக்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *