“தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்” – பாசறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம்

Viduthalai
1 Min Read

“தந்தை பெரியாரின் சமூக நீதிப் போர்” கருத்தரங்கம் பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 466ஆவது வார நிகழ்வாக 29-03-2025 அன்று இரவு 7 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளைகழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலையில் நடைபெற்றது.முன்னதாக ‘அஞ்சா நெஞ்சன் அழகிரி’ அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்தை தி.மு.க.தலைமைகழக பேச்சாளர் மா.வள்ளிமைந்தன், மேனாள் நகர மன்ற உறுப்பினர் சு.தேவேந்திரகுமார் தலைமையில் திறந்து வைத்து உரையாற்றினார்.நிகழ்வில் கருப்பசாமி, ஆறுமுகம், சுமதி மணி, பிச்சை மணி, மணி சுமதி, புஷ்பா, சி.ஜெயந்தி, வழக்குரைஞர் துரை வர்மன், சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியாக மாணவர் கழகம் சி.அறிவுமதி நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *