இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர்கள் ஒன்பது பேர் விடுவிப்பு

1 Min Read

 ராமேசுவரம், ஜூலை 7  ராமேசுவரத்திலிருந்து  ஜூன் 19-ஆம் தேதி கடலுக்குச் சென்ற கலையரசன் என்பவரது விசைப்படகு இயந்திரக் கோளாறு ஏற்பட்டு பழுதாகி நின்றது. பின்னர்,அந்த படகு இலங்கை கடல் பகுதிக்குள் சென்றது. படகிலிருந்த அந்தோணி ஜான்சன், சேசுராஜ், மரிய ரூபன், முத்து, அந்தோணி பிரபு, லெனின், ஜேக்கப், ஜேம்ஸ் பிரதீப், அந்தாணி ஆகிய 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஜூன் 21-ம் தேதி மீனவர்கள் 9 பேரும் யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். 

அதன் பின்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், படகு பழுதான நிலையில் காற்று வீசியதால் எல்லை தாண்டி வந்தது உறுதியானது. இதையடுத்து 9 பேரையும் விடுதலை செய்து நீதிபதி கஜநீதிபாலன் உத்தரவிட்டார். 

விமானத்தில் வருகை

 இந்நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 9 பேரும் நேற்று (6.7.2023) காலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். பின்னர் அவர்களை தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு மீன்வளத் துறையினர் அழைத்து வந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *