3.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை ஒன்றிய அரசு மீட்க வேண்டும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
* தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்; பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு முதலமைச்சர் கடிதம்.
* வக்ஃபு சட்டத்தில் உத்தேச திருத்தம் செய்யும் சட்ட முன்வடிவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* தெலங்கானா அரசு நிறைவேற்றிய பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத மசோதா: ஒன்றிய அரசு ஒப்புதல் கோரி டில்லியில் ஆர்ப்பாட்டம். தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு. 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப் போடுவதாக, ஒன்றிய அரசு மீது புகார்.
* வக்ஃபு மசோதா கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேற்றம். விவாதத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு; வக்பு திருத்த மசோதா இந்தியாவை பிளவுபடுத்தும்; மதத்திற்கு சம்பந்தம் இல்லை என அரசு பதில்; காரசாரமான விவாதம் இரவு வரை நீடித்தது.
தி இந்து
* பிற மொழி ஆசிரியர்கள் இல்லை என்ற காரணம் கூறி, மூன்றாம் மொழியாக, தென் மாநிலங்களில் ஹிந்தியும், வட மாநிலங்களில் சமஸ்கிருதமும் கற்பிக்கப்படுவதாக அரசின் தகவலைச் சுட்டிக்காட்டி கட்டுரை.
* வக்பு (திருத்த) மசோதாவில் முஸ்லிம் அல்லாதவர்களை வக்ஃப் வாரியங்களில் ஒரு பகுதியாக அனுமதிக்கும் சரத்துக்கு பெரும்பான்மையான முஸ்லிம் எம்.பி.க்கள் எதிர்ப்பு.
தி டெலிகிராப்
* இந்திய பொருட்கள் மீது 26 சதவீத வரி விதித்தார் அமெரிக்கா அதிபர் டிரம்ப்.
* உயர் கல்வியின் தரம் நீர்த்துப்போகும் என்ற எதிர்க்கட்சிகளின் அச்சத்திற்கு மத்தியில், கல்வித்துறை சாராத நபர்களை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களாக நியமிக்க அனுமதிக்கும் திட்டத்திற்கு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆதரவு.
டைம்ஸ் ஆப் இந்தியா
* திமுக கரை வேட்டி கட்டும்போது பொட்டு வைக்க வேண்டாம்; தொண்டர்களுக்கு ஆ.ராசா, எம்.பி. அறிவுரை; அது அவரது சொந்தக் கருத்து என அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment