சென்னை, ஜூலை 7 – தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு நிதி சேவையை வழங்கிவரும் வங்கியல்லாத முன்னணி நிதி நிறுவனமாகிய பூனாவாலா ஃபின்கார்ப் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண் டிற்கான நிதி அறிக்கையை வெளியிட்டவுடன் நிறுவனப் பங்கு விலைகள் 5 சதவீதம் உயர்ந்தன.
கடன் வழங்குவதில் நிறுவனம் எட்டியுள்ள விரிவான வளர்ச்சி, சொத்து நிர்வாக மேலாண்மை மற்றும் சொத்தின் தரத்தில் அதிகபட்ச கவனம் செலுத்துவது ஆகிய நடவடிக்கைகள் காரணமாக இந்நிறுவனம் சமீபகாலமாக விரிவான வளர்ச்சியை எட்டியுள்ளது.
இந்நிறுவனம் 2024-ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ. 7,050 கோடியைக் கடனாக வழங்கியுள்ளது. இந்த அளவானது ஆண்டுக்கு ஆண்டு நிறு வனம் எட்டிவரும் 143 சதவீத வளர்ச்சி மற்றும் காலாண்டுக்கு 11 சதவீத வளர்ச்சியாகும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.