விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிப்காட் சார்பில் ரூ.2 கோடி நிதி

1 Min Read

அரசு, தமிழ்நாடு

விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சிப்காட் சார்பில் ரூ.2 கோடி நிதி: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார்

சென்னை, ஜூலை 7 சிப்காட் சார்பில் விளையாட்டு உபகரணங்கள் கொள் முதல் செய்ய ரூ.2 கோடி நிதியை அமைச்சர் உதயநிதியிடம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வழங்கினார். 

இந்த ஆண்டு விளையாட்டு போட்டிகளின் பயன்பாட்டிற்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காவும், விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்காகவும், ஊரக பகு களில் விளையாட்டு போட்டிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்கவும், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட் டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப் பட உள்ளன.

இதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறையின் சிப்காட் நிறுவனம், நிறுவன சமூக பொறுப்புடைமை செயல்பாடுகளின் நிதியின் கீழ் 2 கோடி ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக் கப்பட்ட ‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு’ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னிடம் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  வழங்கினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *