கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘கடல் வழியாக பொருட்கள் எடுத்துச் செல்லும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம். தமிழ்நாடு, குஜராத் மீனவர்களை பாதிக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்.
* உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபி மானமற்றது: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் தர உத்தரவு.
* திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதலமைச்சர் அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா அரசு நிறைவேற்றிய பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தி டில்லியில் இன்று ஆர்ப்பாட்டம். முதலமைச்சர் ரேவந்த் பங்கேற்பு.
* இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வக்பு மசோதாவுக்கு, அய்க்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு.
டெக்கான் ஹெரால்ட்:
* தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் கோரி டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல் கலந்து கொள்கிறார்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்: மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு.
தி டெலிகிராப்:
* தேசிய கல்விக் கொள்கை ‘மொழி சிறுபான்மையி னரின் சூழ்நிலையை போதுமான அளவு புரிந்து கொள்ளவில்லை’ என்று நாடாளுமன்றக் குழு கருத்து.
* பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்துவதில் “பதிவு தாமதம்” குறித்து கவலை தெரிவித்ததோடு, மக்கள் தொகை ஜாதி கணக்கெடுப்புடன் கூடிய விரைவில் அதைத் தொடங்குமாறு அரசுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *