2.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘கடல் வழியாக பொருட்கள் எடுத்துச் செல்லும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம். தமிழ்நாடு, குஜராத் மீனவர்களை பாதிக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்.
* உபி அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது மனிதாபி மானமற்றது: பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் தர உத்தரவு.
* திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர்: முதலமைச்சர் அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா அரசு நிறைவேற்றிய பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத மசோதாவுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர வலியுறுத்தி டில்லியில் இன்று ஆர்ப்பாட்டம். முதலமைச்சர் ரேவந்த் பங்கேற்பு.
* இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வக்பு மசோதாவுக்கு, அய்க்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு.
டெக்கான் ஹெரால்ட்:
* தெலுங்கானா பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் கோரி டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் ராகுல் கலந்து கொள்கிறார்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்: மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு.
தி டெலிகிராப்:
* தேசிய கல்விக் கொள்கை ‘மொழி சிறுபான்மையி னரின் சூழ்நிலையை போதுமான அளவு புரிந்து கொள்ளவில்லை’ என்று நாடாளுமன்றக் குழு கருத்து.
* பத்தாண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக் கெடுப்பை நடத்துவதில் “பதிவு தாமதம்” குறித்து கவலை தெரிவித்ததோடு, மக்கள் தொகை ஜாதி கணக்கெடுப்புடன் கூடிய விரைவில் அதைத் தொடங்குமாறு அரசுக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.
– குடந்தை கருணா