சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

1 Min Read

பணியிடங்கள் விவரம்: 1.ப்ராஜெக்ட் என்ஜினியர் (FTA -1) – 07 2. ப்ராஜெக்ட் என்ஜினியர் (FTA – 2) – 10 3. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA – 3) – 04 4. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA – 4) – 02 5. ப்ராஜெகட் சூப்பர்வைசர் (FTA – 5) – 10 என 33 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி: ப்ராஜெக்ட் என்ஜினியர் பணிக்கு எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பொறியாளர் பட்டம் பெற்று இருக்க வேண்டும். குறைந்த பட்சம் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். சூப்பர் வைசர் (FTA – 4) பணிக்கு மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம். கல்வித் தகுதி பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் கல்வி அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 32 வயதுக்கு மிகாதவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். அரசு விதிமுறைகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு. எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அளிக்கப்படும்.
ஊதியம்: ப்ராஜெக்ட் என்ஜினியர்: முதல் ஆண்டு – மாதம் ரூ.84,000, இரண்டாம் ஆண்டு ரூ.88,000 ப்ராஜெக்ட் சூப்பர்வைசர்: முதல் ஆண்டு மாதம் ரூ.45,000/, இரண்டாம் ஆண்டு ரூ.48,000- வழங்கப்படும்.
தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது. இதர பிரிவினருக்கு ரூ.200 கட்டணம் ஆகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 16.04.2025 ஆகும்.
ஆர்வம் உள்ள பட்டதாரிகள் தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை படித்து விட்டு, தேவையான கல்வி தகுதி மற்றும் அனுபவம் இருப்பதை உறுதி செய்த பிறகு விண்ணப்பிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *