தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பயிற்சிகள்

1 Min Read

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் வேலை வாய்ப்புகளை வழங்க புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த பயிற்சியில் சேர தகுதிகள்: 18 முதல் 33 வயதிற்குள் உள்ள பழங்குடியின இளைஞர்கள் பயிற்சியில் சேர முடியும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேருவதற்குத் தகுதியானவர்கள். பயிற்சி முடிந்தவுடன், மாதம் ரூ. 15,000/- 20,000 தொடங்க ஊதியத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பயிற்சி பாடத்திட்டங்கள்: வெல்டிங் டெக்னீசியன், வீட்டு வயரிங் & மின்சார மோட்டார் சரிசெய்தல், குளிர்சாதன & ரெஃபிரிஜரேஷன் தொழில்நுட்பம், இருசக்கர & நான்கு சக்கர வாகன டெக்னீசியன், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல் பராமரிப்பு. பயிற்சி சென்னையில் உள்ள Murugappa குழுமத்தின் கீழ் நடத்தப்படும்.
மேலும் தகவல்களுக்கு, பதிவு செய்ய https://bit.ly/VettriNichayamskill எனும் இணையதளத்தை அணுகலாம். இத்திட்டம் பல இளைஞர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பை வழங்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *