தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச பயிற்சிகள்

viduthalai
1 Min Read

தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் வேலை வாய்ப்புகளை வழங்க புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த பயிற்சியில் சேர தகுதிகள்: 18 முதல் 33 வயதிற்குள் உள்ள பழங்குடியின இளைஞர்கள் பயிற்சியில் சேர முடியும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேருவதற்குத் தகுதியானவர்கள். பயிற்சி முடிந்தவுடன், மாதம் ரூ. 15,000/- 20,000 தொடங்க ஊதியத்துடன் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
பயிற்சி பாடத்திட்டங்கள்: வெல்டிங் டெக்னீசியன், வீட்டு வயரிங் & மின்சார மோட்டார் சரிசெய்தல், குளிர்சாதன & ரெஃபிரிஜரேஷன் தொழில்நுட்பம், இருசக்கர & நான்கு சக்கர வாகன டெக்னீசியன், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல் பராமரிப்பு. பயிற்சி சென்னையில் உள்ள Murugappa குழுமத்தின் கீழ் நடத்தப்படும்.
மேலும் தகவல்களுக்கு, பதிவு செய்ய https://bit.ly/VettriNichayamskill எனும் இணையதளத்தை அணுகலாம். இத்திட்டம் பல இளைஞர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பை வழங்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *