மேகேதாட்டு அணை : துரைமுருகன் தகவல்

1 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை, ஜூலை 7  மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழ்நாடு சம்மதிக்காது என்று தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சென்னையில் நேற்று (6.7.2023) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் தமிழ்நாட் டிற்கு கர்நாடகம் தரவேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. ஒரு நாளைக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் வரவேண்டும். ஆனால் தற்போது, மூன்றாம் தேதி வரையிலும் 12.213 டிஎம்சி தண்ணீர் நமக்கு கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் 2.993 டிஎம்சி தண்ணீர்தான் கொடுத்துள்ளனர். நமக்கு 9.220 டிஎம்சி தண்ணீர் பற்றாக் குறையாக இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் விவசாயம்கூட பாதிக்கும். டெல்டா மாவட்ட பயிர்களை காப் பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக தண்ணீரை திறந்துவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் கருநாடக அரசிடம் பேச வேண்டும் என ஒன்றிய அரசின் ஜல் சக்தி அமைச்சரிடம் நான் கேட்டுக் கொண் டிருக்கிறேன். அவரும் உடனடியாக அதிகாரிகளை அழைத்து பேசி என்ன நிலைமை என்று என்னிடம் உறுதி யளித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருநாடகம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை தராமல் இருப்பது சட்டப்படி குற்றம் என ஒன்றிய அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன். பேச்சுவார்த்தை நடத்தினாலும், எழுத்து மூலமாக தெரிவித்தாலும் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு தமிழ்நாடு ஒருபோதும் சம்மதிக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *