கிள்ளியூர் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

viduthalai
1 Min Read

கிள்ளியூர், ஏப். 2- கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் கருங்கல் கழக பேரூர் அலுவலகத்தில் நடை பெற்றது.
திராவிடர்கழக பேரூர் செயலாளர் த.ஜெயக்குமார் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். கிள்ளியூர் ஒன்றிய செய லாளர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் கருத்துரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன், கழக வளர்ச்சிப்பணிகள், எதிர்கால பிரச்சாரத் திட்டங்கள் குறித்து சிறப்பு ரையாற்றினார் தோழர்கள் கலைப்பிரியன் உட்பட ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்

தந்தை பெரியாருடைய கொள்கையை உலகமய மாக்க ஓயாது உழைக்கும் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் பெரியாருடைய கருத்துகளை பரப்பிவரும் தலைவருக்கு வாழ்த்து தெரிவிப்பது,

சிதம்பரத்தில் நடை பெற்ற கழகப் பொதுக்குழு தீர்மானங்களை முழுமன தாக ஏற்று வரவேற்று குமரி மாவட்டத்தில் செயல்படுத்துவது, கிள்ளியூர் ஒன்றிய திராவிடர்கழகம் சார்பாக கழக பொதுக்கூட்டம் கருங்கல் பகுதியில் நடத்துவது, கருங்கல் பேருந்து நிலைய பணி யினை உடனே தொடங்கி பொதுமக்கள் நலன் கருதி விரைந்து முடிக்க கருங்கல் பேரூராட்சியைக் கேட்டுக்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கழக கிள்ளியூர் ஒன்றிய செயலாளராக கலைச்செல்வனும், கருங் கல் பேரூர் செயலாளராக த.ஜெயக்குமாரும் அறிவிக் கப்பட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *