பழனி மாவட்டம், சத்திரப்பட்டியில் தெருமுனைக்கூட்டம்

1 Min Read

சத்திரப்பட்டி, ஜூலை 7- 3-7-2023 அன்று மாலை 6-00 மணியளவில் பழனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், சத்திரப்பட்டியில்  வைக் கம் அறப்போர், கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட இளை ஞரணித் தலைவர் சி.கருப்புச்சாமி தலைமை தாங்கினார். 

ஒட்டன்சத்திரம் நகரத்தலைவர் வழக்குரைஞர், ஆனந்தன் அனை வரையும் வரவேற்றார். பழனி மாவட்டச்செயலாளர் தொடக்கவுரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து கழகப் பேச்சாளர் தஞ்சை, இரா.பெரியார் செல்வம் விழாவின் நோக்கங்களை மிகவும் விளக்கமாகவும், உணர்வுப் பூர்வமாகவும்,  எளிமையாக விளங் கும்படி பேருரையாற்றினார்.

இந்நிகழ்வில் வேடசந்தூர் இராமகிருஷ்ணன், சி.இராதா கிருட்டிணன், ச.திராவிடச் செல்வன், பெ.பழனிச்சாமி (ம.தி.மு.க), தமிழ்வேந்தன்(ம.தி.மு.க), அண்ணா, புரூஸ்பெரியார், ப.பாலன், அ.தமிழ்முத்து (தி.இ.த.பே), ஆதித்தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பழனி ராஜா, ஆயக்குடி க.நாகராசு உள்ளிட்ட பெரும்பான்மையான தோழர்கள் பங்கேற்று உரையாற் றினர்.

இறுதியாக பழனி ஒன்றியத் தலைவர் க.மதணபூபதி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *