செந்துறையில் பரபரப்பாக நடைபெற்ற சுழலும் சொற்போர்
செந்துறை, ஏப். 1- அரியலூர் மாவட்டம் செந்துறையில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் உரிமை பறிப்பு, நிதி மறுப்பு, ஹிந்தி திணிப்பு என்ற தலைப்பில் சுழலும் சொற்போர் பரபரப்பாக நடைபெற்றது.
30.3.2025 அன்று மாலை 7 மணியளவில் செந்துறை பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஆகியோர் பலத்த ஒலி முழக்கங்களிடையே மாலை அணிவித்த பின் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் தலைமையேற்க, ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன் வரவேற்புரையாற்றினார். கழக காப்பாளர் சு. மணிவண்ணன், காப்பாளர் சி.காமராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன், மாநில ப.க.அமைப்பாளர் தங்க. சிவமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் இரத்தின.இராமச் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹிந்தி திணிப்பு-நிதி மறுப்பு
கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் சுழலும் சொற்போர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார். கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் நடுவர் பொறுப்பேற்று திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சித் திறமை குறித்தும் மத்திய பாஜக அரசு ஏற்படுத்தும் தடைகள் குறித்தும் உரையாற்றி சொற்பொழிவாளர்களை வாதிட அனுமதித்தார். “ஹிந்தி திணிப்பு”என்ற தலைப்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன், “நிதி மறுப்பு” என்ற தலைப்பில் கழகப் பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசியும், “உரிமை பறிப்பு”என்ற தலைப்பில் கிராம பிரச்சார குழுத் தலைவர் முனைவர்அதிரடி. அன்பழகன் ஆகியோர் வாதங்களை எடுத்து வைத்தார்கள்.
இறுதியாக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என்று சொன்ன நிர்மலா சீதாராமனை கண்டித்தும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிதி வழங்காத ஒன்றிய பாஜக அரசை அம்பலப்படுத்தியும் “ரூ” என்ற ஒற்றை எழுத்தை பயன்படுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய துணை கண்டத்தை அதிர வைத்த பாங்கினையும் விளக்கி மீதி எழுத்துகளை ஆயுத எழுத்தையும் சேர்த்து பயன்படுத்தினால் நிலைமை என்னவாகும்?என்று கேள்வி எழுப்பி சிறப்புரையாற்றினார் .செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா செல்வக்குமார் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர்
மா.சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ஆ.இள வழகன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் வெ. இளவரசன், மாவட்ட இளைஞரணி தலைவர் லெ. தமிழரசன் மாவட்டத் துணைத் தலைவர் இரா.திலீபன், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் மா.கருணாநிதி, மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் மு.ராஜா, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ப. மதியழகன், மேனாள் மாவட்ட தொழிலாளரணி தலைவர் தா.மதியழகன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா. தமிழரசன், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் அ.சேக்கிழார், ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயராமன், தா.பழூர் ஒன்றிய தலைவர் இரா .இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி..வெங்கடாசலம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விஜயராகவன் செந்துறை பொன்பரப்பி வை.சுந்தரவடிவேலு, அரியலூர் நகர செயலாளர்ஆட்டோ தர்மா, அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய செயலாளர் த.செந்தில், மாணவர் கழக பொறுப்பாளர் மு. தமிழறிவாளன், ஒன்றியதுணைத் தலைவர் சோ.க. சேகர், செ.எழில்மலை, மணப்பத்தூர் பூ.கலைமணி, ஜோதி த. இனியா, ஜெயங்கொண்டம் நகரத் தலைவர் துரை பிரபாகரன், சேடக்குடிக்காடு நீ. பெரியார் செல்வன், வீராக்கன் மாயவன், உள்ளிட்ட தோழர்களும் பொது மக்களும் பங்கேற்றனர்.