ஊற்றங்கரை ஒன்றியம் ஊணாம்பாளையம் கிராமத்தில் புதிய கிளைக்கழக அமைப்புக்கான ஆலோசனைக்கூட்டம்

viduthalai
1 Min Read

கிருட்டினகிரி, ஏப். 1- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றியம் ஊணாம்பாளையம் கிராமத்தில் திராவிடர் கழகம் சார்பில் புதிய கிளைக்கழக அமைப்பு பணிக்கான கலந்துரையாடல் கூட்டம் 28/03/2025 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய கழகத் தலைவர் அண்ணா அப்பாசாமி தலைமை வகித்தார். ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் கோ.சரவணன் அனைவரையும் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர் செ.சிவராசன் இணைப்புரை வழங்கினார். கூட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் சீனிமுத்து. இராசேசன், மேனாள் ப.க.நிர்வாகி சித.அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக செயலாளர் செ.பொன்முடி, தருமபுரி மேனாள் மண்டலத் தலைவர் பழ. வெங்கடாசலம்,
ஊற்றங்கரை ஒன்றிய ப.க. தலைவர் இராம.சகாதேவன் ஆகியோர் கழக அமைப்பு பணிகள் குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் குறித்தும் விரிவான செயல்பாடுகளை எடுத்துக் கூறி கருத்துரை வழங்கினர்.

கூட்டத்தில் பச்சையப்பன், மாது, மாதேஸ்வரன், சென்னகிருஷ்ணன், டையா சுமதி, அபிநயா, இந்துஜா,நவனிதா, மனிஷா, கவிதா, அருட் பிரகாஷ், சுதர்சன், மங்கம்மாள், துளசி, மாதேஸ்வரன், விஜயலட்சுமி, சுதேசி கன், கவுரி, மணிமேகலை, ஓவியா, அச்சுதன், அழ இராஜேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நிறைவாக மா.மணிகண்டன் நன்றி கூறினார். விரைவில் ஊணாம்பாளையம் கிராமத்தில் திராவிடர் கழக புதியக் கிளைகழக அமைப்புக்கு நிர்வாகிகளை மாவட்ட கழகத் தலைவர் ஒப்புதலோடு அறிவிப்பது எனவும், தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்துவது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *