சென்னை, மார்ச் 31- தொழில் முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகளை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.
ஏற்கெனவே டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பாக தொழில் முனைவோருக்கு சாட் ஜிபிடி பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சொந்தமாக யூடியூப் அலைவரிசை தொடங்குவது தொடர்பான பயிற்சி தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு சான்றிதழும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய தொழில்களை உருவாக்கும் வகையிலும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலகத் தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் ஏற்கெனவே பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ளன.
தொழில் முனைவோராக…
வேலைவாய்ப்பு மட்டும் இன்றி இளைஞர்களை தொழில் முனைவோராக மாற்றவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சிறு, குறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் அவசியமாகிறது. அந்த வகையில் தொழில் முனைவோர் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் சாட் ஜிபிடி மூலம் தமிழ்நாடு அரசு பயிற்சி அளிக்கிறது.
இந்த நிலையில் தொழில் முனைவோருக்கு சொந்தமாக யூட்யூப் அலைவரிசையை உருவாக் குதல் தொடர்பான பயிற்சி வழங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.
யூடியூப் பயிற்சி
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், “தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம். சென்னையில் சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல்’ தொடர்பான பயிற்சியானது 22.04.2025 முதல் 24.04.2025 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந் நிறுவன வளாகத்தில் நடைபெற உள்ளது.
“சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல் சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள் ஆகியவை தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் (ஆண் /பெண்/திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் பங்குப் பெறும் ஆண் / பெண்/ திருநங்கைகள் தங்கிப் பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். முகவரி தொலைபேசி /கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, 2.4.8.8 ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032. அலுவலக சாலை என்ற 9360221280/9543773337 (முன்பதிவு அவசியம், பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்)” என கூறப்பட்டுள்ளது.