தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளராகவும்,தற்போது நகர இளைஞரணி செயலாளராகவும் சிறப்பாக கழகப்பணியாற்றிய,தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மிகவும் பற்றுக்கொண்டவருமான மு.அர்ச்சுனன் (வயது 41) அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனில்லாமல் இன்று (31.03.2025) காலை 6:30 மணியளவில் கடகத்தூர் அவரது வீட்டில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மு.அர்ச்சுனன் அவர்களின் உடலுக்கு மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books