தருமபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளராகவும்,தற்போது நகர இளைஞரணி செயலாளராகவும் சிறப்பாக கழகப்பணியாற்றிய,தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மிகவும் பற்றுக்கொண்டவருமான மு.அர்ச்சுனன் (வயது 41) அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனில்லாமல் இன்று (31.03.2025) காலை 6:30 மணியளவில் கடகத்தூர் அவரது வீட்டில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மு.அர்ச்சுனன் அவர்களின் உடலுக்கு மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில் கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.