சென்னை, மார்ச் 31- நீதிமன்ற வழிகாட்டுதல் படி, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நிகழாண்டில் புதிதாக 6 கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.
சட்டப் பேரவையில் 26.3.2025 அன்று கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்து வினாவை திருத்தணி திமுக உறுப்பினா்
எஸ்.சந்திரன் எழுப்பினாா்.
அதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
திமுக அரசு பொறுப்பேற்றவுடன், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 10 கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தடுக்கும் வகையில், நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப் பட்டன.
சட்டப் போராட்டங் களுக்குப் பிறகு, சென்னை கொளத்தூா், ஒட்டன் சத்திரம், திருச்செங்கோடு, விளாத்திகுளம் ஆகிய இடங்களில் புதிதாக கல்லூரிகள் தொடங்கப் பட்டன.
வழக்குகளால் 6 கல்லூரிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றம் இப்போது ஒருசில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, ஆறு கல்லூரிகளையும் நிகழ் ஆண்டுக்குள் தொடங்குவதற்கான நல்ல சூழலை உருவாக்கிய பிறகு நிச்சயம் திருத்தணியிலும் கல்லூரி உருவாக்கப்படும். இதேபோன்ற கோரிக் கைகளை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோரும் முன் வைத்துள்ளனா். அவைகளும் பரிசீலிக்கப் படும் என்றாா்.
யானை வாங்குவதில் சிக்கல்: இதைத் தொடா்ந்து, திருத்தணி கோயிலுக்கு யானை வழங்குவது தொடா்பான கேள்வியை சந்திரன் எழுப்ப, அதற்கு பதிலளித்த அமைச்சா் சேகா்பாபு, கோயில்களுக்கு யானைகள் வாங்குவது தொடா்பாக இரண்டு நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதில் சாதகமான உத்தரவு கிடைத்தவுடன் திருத்தணி கோயிலுக்கு உபயதாரா்களால் யானை வழங்கப்படும் என்று பதிலளித்தாா் அவா்.