புதுச்சேரி, மார்ச் 31- புதுச்சேரி நகராட்சி தெற்குப் பிரிவுத் தலை வர் மு.ஆறுமுகத்தின் இளைய மகன் பொறியாளர் ஆ.அன்பழகன் (வயது 42) 27.03.2025 அன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு திராவிடர் கழகம் சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று 31.03.2025 திங்கள் காலை 10.00 மணியளவில் புதுவை கென்னடி நகரிலுள்ள அழகிரி ஆறுமுகம் இல்லத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நேரில் வருகை தந்து அவருக்கு மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்வில் புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, கழகக் காப்பாளர் அரங்க. பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், கடலூர் மாநகராட்சித் தலைவர் தென். சிவக்குமார். மாவட்டச் செயலாளர் க. எழிலேந்தி, மாவட்டத் துணைத் தலைவர் சி.மணிவேல். மாவட்டத் துணைச் செயலாளர் ந. பஞ்சமூர்த்தி, மகளிரணி ச.கலைச்செல்வி, வாசுகி பாலமுருகன். விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டனர்.