புதுச்சேரி ஆ. அன்பழகன் மறைவு: கழகத் தோழர்கள் ஆறுதல்

1 Min Read

புதுச்சேரி, மார்ச் 31- புதுச்சேரி நகராட்சி தெற்குப் பிரிவுத் தலை வர் மு.ஆறுமுகத்தின் இளைய மகன் பொறியாளர் ஆ.அன்பழகன் (வயது 42) 27.03.2025 அன்று மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரின் உடலுக்கு திராவிடர் கழகம் சார்பில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று 31.03.2025 திங்கள் காலை 10.00 மணியளவில் புதுவை கென்னடி நகரிலுள்ள அழகிரி ஆறுமுகம் இல்லத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நேரில் வருகை தந்து அவருக்கு மற்றும் பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிகழ்வில் புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி, கழகக் காப்பாளர் அரங்க. பன்னீர் செல்வம், மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், கடலூர் மாநகராட்சித் தலைவர் தென். சிவக்குமார். மாவட்டச் செயலாளர் க. எழிலேந்தி, மாவட்டத் துணைத் தலைவர் சி.மணிவேல். மாவட்டத் துணைச் செயலாளர் ந. பஞ்சமூர்த்தி, மகளிரணி ச.கலைச்செல்வி, வாசுகி பாலமுருகன். விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *