கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.3.2025

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் உயர்வு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்: ஏழைகளுக்கு வங்கி சேவை சேராது என குற்றச்சாட்டு.
* மோடி அரசு கொண்டு வரும் வக்பு மசோதாவை நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் ஆதரித்தால், இசுலாமியர் வாக்கினை இழக்கும் அபாயம் உள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2023-2024 ஆம் ஆண்டில் திரிபுராவில் 144 பாலியல் வன்கொடுமைகள், 31 பெண்கள் கொல்லப் பட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை.
* உ.பி. யோகி ஆட்சியில் ஒரு மதுபான பாட்டில் வாங்கினால், இன்னொன்று இலவசம்; இது ‘டபுள் இஞ்சின் சர்க்காரின் டபுள் ஆபர்’. என ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றச்சாட்டு. ஆனால் அதே அரசு, நவராத்திரியின் போது கோயில்களுக்கு அருகில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து ‘டபுள் கேம்’ செய்கிறது எனவும் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “இந்தித் திணிப்பு மற்றும் தொகுதி வரையறை போன்ற வளர்ந்து வரும் மொழியியல் மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தெற்கு ஒற்றுமைக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. நாம் ஒன்றிணைந்து நமது உரிமைகள் மற்றும் அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் தோற்கடிக்க வேண்டும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாநில தலைவர்களுக்கு வேண்டுகோள்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *