கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 31.3.2025

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஏடிஎம்மில் பணம் எடுக்க கட்டணம் உயர்வு; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்: ஏழைகளுக்கு வங்கி சேவை சேராது என குற்றச்சாட்டு.
* மோடி அரசு கொண்டு வரும் வக்பு மசோதாவை நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா தளம் ஆதரித்தால், இசுலாமியர் வாக்கினை இழக்கும் அபாயம் உள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2023-2024 ஆம் ஆண்டில் திரிபுராவில் 144 பாலியல் வன்கொடுமைகள், 31 பெண்கள் கொல்லப் பட்டதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிக்கை.
* உ.பி. யோகி ஆட்சியில் ஒரு மதுபான பாட்டில் வாங்கினால், இன்னொன்று இலவசம்; இது ‘டபுள் இஞ்சின் சர்க்காரின் டபுள் ஆபர்’. என ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் குற்றச்சாட்டு. ஆனால் அதே அரசு, நவராத்திரியின் போது கோயில்களுக்கு அருகில் இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து ‘டபுள் கேம்’ செய்கிறது எனவும் கண்டனம்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “இந்தித் திணிப்பு மற்றும் தொகுதி வரையறை போன்ற வளர்ந்து வரும் மொழியியல் மற்றும் அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு, தெற்கு ஒற்றுமைக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. நாம் ஒன்றிணைந்து நமது உரிமைகள் மற்றும் அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒவ்வொரு முயற்சியும் தோற்கடிக்க வேண்டும்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென் மாநில தலைவர்களுக்கு வேண்டுகோள்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *