புவிவெப்ப மயமாதலால் பனிப்பாறை உருகி தளர்வு ஏற்பட்டதே மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்திற்கு காரணம் அமெரிக்க புவியியல் ஆய்வு மய்யம் ஆய்வறிக்கை வெளியீடு

Viduthalai
1 Min Read

வாசிங்டன், மார்ச் 30- மியான்மர் மற்றும் தாய் லாந்து நில நடுக்கத்திற்கான காரணத்தை அமெரிக்க புவியியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியா மற்றும் ஆசியா இரண்டும் தனித்தனி தட்டுக்கள். பல கோடி ஆண்டுகளாக ஆப்பிரிக்காவில் இருந்து பிரிந்த இந்திய நிலப்பகுதி மெல்ல மெல்ல நகர்ந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது. இது ஆசியப் பகுதியில் இணையும்போது ஏற்பட்ட அழுத்தம் தான் உலகிலேயே மிகபெரிய இமயமலைத்தொடர் உருவாகி உள்ளது. மியான்மர், மற்றும் தாய்லாந்து இரண்டு நாடுகளும் இந்திய ஆசிய தட்டுகளின் விளிம்புகளின் மீது உள்ளன.

பல ஆண்டுகளாக புவிவெப்பமயமாதலால் இமயமலை பனிப்பாறைகள் அதிகமாக உருகத் தொடங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட தளர்வுகள் காரணமாக அவ்வப்போது இரண்டு தட்டுகளுக்கும் இடையே சரிவுகள் ஏற்படுகிறது. இதுதான் நேபாளம் மற்றும் திபெத்தில் நடந்த நில அதிர்விற்கும் காரணமாக இருந்தது, தற்போது தாய்லாந்து மற்றும் மியான்மரில் நடந்த பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கம் வந்ததற்கும் இந்திய ஆசிய தட்டுகள் நகர்வே காரணம் என்று அமெரிக்காவின் புவியியல் நிபுணர்கள் சான்றுகளோடு கூறியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *