சென்னை, மார்ச் 29- சென்னையைச் சேர்ந்த – பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகிய ஒடிசி டெக்னாலஜீஸ் லிமிடெட், கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தகவல் பாதுகாப்பு சார்ந்த தயாரிப்புகள், சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது.
இந்த நிறுவனம் இரண்டு மென்பொருள் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஸார்கீசைன் மெயில் (xorkeesign Mail), ஸார்கீசைன் ஸ்பாட் (xorkeesign Spot) என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்தத் தயாரிப்புகள் இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகவும் முக்கியமான, பன்னாட்டு பிரச்சினைக்குத் தீர்வு அளிக்கின்றன. அத்துடன் 20 கோடி மின்னஞ்சல் பயனர்களுக்கும் 100 கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட் போன் பயனர்களுக்கும் இது உதவக்கூடும்.
ஒடிசி வெளியிடும் புதிய தயாரிப்புகள் இந்தப் பிரச்சினையை நேரடியாகக் கையாள்கின்றன. தங்கள் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்தி, பிற செய்திகளை அனுப்புபவர்கள் தங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த ஒரு வழியை உருவாக்குவதன் மூலம், ஹேக்கர்கள் இனிமேல் முகமூடி அணிந்து வரமுடியாது. மேலும் இதன்மூலம் பாதிக்கப்படுபவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் அதிகாரத்தைப் பெறுகின்றனர்.
பெருந்தொற்றுக்கு மத்தியில் நாம் இருந்தபோது, சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல் போன்ற அனைத்து நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டபோது நிலைமை மாறிவிடவில்லை. ஆனால் இறுதியில், அந்த அச்சுறுத்தலை முற்றிலுமாக நீக்கியது தடுப்பூசிதான். நாங்கள் வெளியிடும் மென்பொருளும் தடுப்பூசிக்கு சமம்” என இந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் பி.ராபர்ட் ராஜா தெரிவித்துள்ளார்.