மணிப்பூர் பிரச்சினை: நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜூலை 7- நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்தனர்  

உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம்  நேற்று (6.7.2023) நடந்தது. தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மாநில சிறை சீர்திருத்தம் தொடர் பாக விவாதிப்பதற்காக இந்த கூட் டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திக்விஜய் சிங் மற்றும் பிரதிப் பட்டாச்சார்யா, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர்கள் டெரிக் ஓபிரையன் ஆகியோர், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி கடிதம் அளித்தனர். அடிப் படையில் ஒரு காவல் அதிகாரியான நீங்கள் மணிப்பூர் பிரச்சினையின் அடிப்படை குறித்து புரிந்து கொள்ள வேண்டும் என்று குழுத் தலைவர் பிரிஜ்லாலை நோக்கி கூறிய அவர்கள், மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்றும் தெரிவித்தனர். 

ஆனால் இதற்கு நிலைக்குழுத் தலைவர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய் தனர். இந்த மாதம் நடைபெறும் மேலும் 2 கூட்டங்களிலும் அவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது. நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப் பினர்கள் வெளிநடப்பு செய்த விவ காரம் ஒன்றிய அரசு வட்டாரங்க ளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *