புதுச்சேரியில் அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை மணியம்மையார் படத்திறப்பு.

0 Min Read

புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் 28.03.2025 அன்று மாலை இராசா நகர் பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதைச் சுடரொளி அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை மணியம்மையார் ஆகியோரின் நினைவுகளைப் போற்றும் வகையில் அவர்களது உருவப் படங்களைத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர். துரை. சந்திரசேகரன் திறந்து வைத்து மலர்வணக்கம் செலுத்தினார். மாவட்ட கழகத் தலைவர் வே.அன்பரசன் தலைமையில், புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *