தொண்டாற்றினால் வாழ்வும் உயரும், வாழ்நாளும் உயரும் (மனத்) தாழ்வும் நீங்கும்!

1 Min Read

சிங்கப்பூர் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை

மனிதநேய சேவைகள் செய்தால் வாழ்க்கைத்தரம் உயரும் என்பது ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த தேசியச் சமூக சேவை மன்றம் பல ஆண்டுகளாக மனிதர்களின் வாழ்நாள் மற்றும் நற்பண்புகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு முடிவுகளில் தொண்டறத்தில் ஈடுபடுவோரின் வாழ்க்கைத்தரம் தொண்டூழியம் செய்யாதோரைவிட ஒன்றரை மடங்கு நன்றாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளது.
தொடர்ந்து தொண்டூழியம் செய்வோர் சமூகத்தினருடன் அணுக்கமான உறவு கொள்ளமுடிவதாகவும் மனநலம் சிறப்பாய் இருப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்த ஆய்வறிக்கை தொடர்பாக பேசிய சிங்கப்பூர் பிரதமர் ஜெங் ச்வீ கியேட் (Heng Swee Keat) – மனிதர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் தொண்டறத்தைப் பேணி வளர்க்கச் சமூக சேவை அமைப்புகளுடனும் தன்னிச்சையாகவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பை உணர்ந்து தொண்டு செய்யும் போது மனநிறைவு ஏற்படும். இதன் மூலம் ஈகோ, மற்றும் தாழ்வு மனப்பான்மை அகலும். இதுவே பல மனம் தொடர்பான நோய்க்கு அருமருந்தாக இருக்கிறது. இதன் மூலம் உடலும் உறசாகமாக மாறுகிறது. வாழ்நாளும் அதிகரிக்கும் – என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *