பகுத்தறிவுப் பகலவன்

1 Min Read

பெரியார் என்றோர் ‘பகுத்தறிவுப் பகலவனின்’

குறையாத கதிரொளியில் விளைந்த

கொள்கைக் கதிர் முத்தே!

மறையாத வரலாறாய் வாழ்ந்திலங்கும்

அருமருந்தே!

நினைவாலும் தமிழர்தம் 

நலம் காக்கும் கேடயமே!

கனவாலும் இனப்பகைவர் கைக்கொள்ளத் 

துணியா திராவிடக் கோட்பாடே!

மழை போன்று; நிலம் போன்று 

தகைமைசால் பெருங்குணமே!

உழைப்பாலே உளத்தாலே இளமைப்பொங்கும்

தமிழுக்கு இணையான “தமிழர்” தலைவரே!

மலைமுகடே! எரிதழலே!

தானுற்ற கொள்கை உறவுகளுக்கோர் வற்றாத 

உவப்புகுக்கும் மழலை எழில் வடிவே!

வாழிய வாழியவே!

தமிழர் அகமாளும் 

தமிழினிய பாயிரமே!

வாழிய வாழியவே!

தலைவர் எந்நாளும் 

தமிழருக்கோர் அறிவாயுதமே!

நிலை கொள்ளும் எங்கள் இனமானம்!

தங்கள் குரல் எங்கள் உரிமைக் எக்காளம்!

தலை நிமிரும் தமிழர் வாழ்வும்!

தங்கள் பேனா முனை சேர்க்கும் 

இது உறுதி எந்நாளும்.

– அ.சி கிருபாகரராஜ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *