பெரியார் கல்வி நிறுவன பொறுப்பாசிரியைக்கு சிறந்த தேசிய மாணவர் படையின் பயிற்சியாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டு

1 Min Read

தேசிய மாணவர் படையின் திருச்சி மாவட்டத் தலைமையகம், ஆண்டு தோறும் சிறந்த தேசிய மாணவர் படையின் பயிற்சி யாளர்களுக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அவர்களைப் பெருமைப்படுத்தி வருவது வழக்கமாகும்.

பெரியார் கல்வி நிறுவனங்கள்

தேசிய மாணவர் படையின் ஒட்டுமொத்தத் தரத்தை மேம்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு, செயல்திறன், அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் தலைமைத்துவப் பண்புடன் செயலாற்றிய பயிற்சி ஆசிரியர்களில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான விருது, திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், தேசிய மாணவர் படையின் பொறுப்பாசிரியை இ.மனோன்மணிக்கு கர்னல்.

ஒய்.விஜயகுமார் கடந்த 22.3.2025 அன்று வழங்கினார்.

விருது பெற்று சாதனை படைத்த ஆசிரியையை பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *