கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு நூல்கள் பரப்புரைத் திட்டம்

0 Min Read

கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு நூல்கள் பரப்பும் பிரச்சாரம் குமரிமாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம் முளகுமூடு பேரூராட்சி முளகுமூடு பகுதியில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட கழகத் துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், கழக பொதுக்குழு உறுப்பினர் மு.இராஜசேகர், கழக கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ், திமுக மேல்புறம் ஒன்றிய செயலாளர் சைனி கார்டன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *